இரண்டு முறை துபாய் பயணம் ரத்து – மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமைச்சர்!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ஒரே நாளில் இரண்டு முறை ரத்து.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல இருந்தார். இதற்காக அவர் மீனப்பாக்கம் விமான நிலையம் வந்த நிலையில், விசாவில் பிரச்னை என்பதால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, வீட்டிற்கு சென்றுவிட்டாா். இதன்பின், விசா பிரச்சனை முடிந்து நேற்று மாலை ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் புறப்பட விமான நிலையம் வந்த அமைச்சர், கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக வீடு திரும்பினார்.

துபாய் புறப்படுவதற்கு விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகு அமைச்சர் துரைமுருகனுக்கு லேசான நெஞ்சிவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்  விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமைச்சா் துரைமுருகன் ஏா் இந்தியா அதிகாரிகளை அழைத்து நான் இன்று பயணம் செய்ய விரும்பவில்லை எனக் கூறி தனது பயணத்தை ரத்து செய்வதாக தெரிவித்தார். பின்னர் அதிகாரிகளும் அமைச்சரின் துபாய் பயணத்தை இரண்டாவது முறையாக ரத்து செய்தனர்.

அமைச்சர் துரைமுருகனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், லேசான நெஞ்சிவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன் சிகிச்சை முடிந்த பிறகு வீடு திரும்பியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே, நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ஒரே நாளில் இரண்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

2 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

2 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

3 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

3 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

6 hours ago