திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக இருவர் கைது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டார்மடம் எனும் பகுதியில் செல்வன் என்பவரின் குடும்பத்தாருக்கும் அந்த பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமண வேலு என்பவருக்குமான நிலத்தகராறில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வன் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார். இதனால் செல்வனின் குடும்பத்தார் நியாயம் கேட்டு கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செல்வத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன் என்பவர் அவர்களோடு கூட இணைந்து போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று நள்ளிரவில் அவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்பொழுது திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா அவர்களின் கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக ஜின்னா, செல்வநாயகம் ஆகிய 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…