சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக போஸ்டர் ஓட்டியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி இதுவரை 148 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதனைதொடர்ந்து அதிமுக, 85 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அந்தவகையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 52,106 வாக்குகள் பெற்று, 36,933 வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி, 15,173 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் தேர்தலிலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அவர் வெற்றி பெற்றுள்ளதாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக திமுகவினர் போஸ்டர் ஓட்டினார்கள். இந்த போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…