மோடியின் ஆட்சியில் ஏழைகளின் வருமானம் குறைவு – கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு

Published by
பாலா கலியமூர்த்தி

முதலில் படேலை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடி, தற்போது நேதாஜியை தேர்ந்தெடுத்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழைகளின் வருமானம் குறைந்து, பணக்காரர்களின் வருமானம் 33% அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவிகிதம் குறைந்துள்ளது. ஏழைகளின் வருமானம் குறைந்ததால் ஏற்பட்ட விளைவுகளை கிராமப்புறங்களில் காண முடிகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஏழை, பணக்காரர்கள் வேறுபாடு அதிகம் உள்ளது.

இந்த வேறுபாடு என்பது அரசிடம் சரியான பொருளாதார கொள்கை இல்லாததையே காட்டுகிறது. விசைத்தறி இந்தியா முழுவதும், கோவையில் மட்டுமல்ல மகாராஷ்டிராவில் விசைத்தறிகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இல்லா சூழல் உருவாகியுள்ளது. இதற்கு காரணம் சரியான பொருளாதார தொழில்கொள்கை இல்லாததது என்பதாகும். மோடி அரசின் தவறான கொள்கையால் தான் நூல், பஞ்சு விலை அதிகரித்துள்ளது. நூல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் நாடுமுழுவதும் விசைத்தறியாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளன.

மும்பை பொருளாதார ஆய்வு மையத்தின் புள்ளி விவரத்தின்படி, தகவல் வந்துள்ளது என்றும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி வழக்கம்போல் நேதாஜிக்கு புகழ்பாட ஆரம்பித்துள்ளார். முதலில் படேல் அவர்களை தேர்ந்தெடுத்தார். இப்போது நேதாஜி அவர்களை தேர்தெடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி பொறுத்தளவில், மகாத்மா காந்தியாக இருந்தாலும், நேதாஜி, படேல் மற்றும் நேருவாக இருந்தாலும் அனைவரும் தோழமை உணர்வோடு பெருத்தனமையாக பழகியவர்கள்.

இவர்களில் யாருக்குமே மோடிக்கும், அத்வானிக்கு  இருப்பதை போன்ற உறவு இருந்தது அல்ல. மோடி, அத்வானி உறவு உலகமறிந்த உண்மை. அத்வானி அவர்கள் பேசுகிற போது, மோடி அவர்கள் ஒலிபெருக்கியை அவரது வாயிற்கு முன்பாக பிடித்து கொண்டியிருந்தவர். அந்த அளவிற்கு அவருக்கு அடக்கமான துணையாக இருந்தவர் என்றும் விமர்சித்தார். குஜராத் என்றாலே மகாத்மா காந்திதான் முதன்மையானவர். அங்கு படேலின் பிரமாண்ட சிலை வைப்பது காந்தியை குறைத்து காட்டவே எனவும் குற்றசாட்டினார். மேலும், காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பில் குடிநீருக்கு 11 டிஎம்சி ஒதுக்கப்ட்டுள்ளது.

காவிரி குடிநீர் பிரச்சனையில் தமிழ்நாடு பக்கம் காங்கிரஸ் நிற்கும் என்றும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்த கே.எஸ் அழகிரி, இந்திய ஆட்சி பணி அதிகாரிகளுக்கான விதிகளை மாற்றுவது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிடம் நிறைய இடங்கள் கேட்க உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…காணொளி வாயிலாக கலந்துகொள்ளும் முதல்வர்!

இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…காணொளி வாயிலாக கலந்துகொள்ளும் முதல்வர்!

சென்னை:சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது அரசியல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…

21 minutes ago

தமிழகத்தில் 10-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் ஜூன் 10-ஆம்…

39 minutes ago

நார்வே செஸ் : குகேஷ் கனவுக்கு செக் வைத்த ஃபேபியானோ…மீண்டும் சாம்பியனான மக்னஸ் கார்ல்சன்!

ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக…

1 hour ago

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!

டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…

13 hours ago

11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!

பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…

14 hours ago

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.!

விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…

14 hours ago