ஜன.3ம் முதல் 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

கர்ப்பிணிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

தமிழகம் முழுவதும் இன்று 16வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் இன்று 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

இதுவரை ஒமிக்ரான் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றும் தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் இன்று 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கூறிய அமைச்சர், தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில், 84.87% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.85% பேர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர் என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், மத்திய அரசு வழிகாட்டுதல்படி ஜனவரி 3ம் தேதி முதல் 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்றும் அறிவித்தார். மேலும், ஜனவரி 10ம் தேதி முதல் 60 வயதை தாண்டியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, நேற்று நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…

35 minutes ago

“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

49 minutes ago

ரவி மோகன் விவகாரம்: ”நாளைய விடியல்” – கெனிஷாவின் பதிவால் பரபரப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…

1 hour ago

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

2 hours ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

3 hours ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

3 hours ago