வைகாசி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudi

தூத்துக்குடி :  திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுமுறை எனவும், ஈடு செய்யும் விதமாக ஜூன் 14ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் ” தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி ((Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.06.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்கள் தெரிவித்துள்ளார்” எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்