உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை! காவல் நிலையத்தின் முன் எரிக்கப்பட்ட கார்! நடந்தது என்ன?!

Published by
மணிகண்டன்

வேதாரண்யத்தில் நேற்று பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதையும் பரபரப்பாக்கியது. இதனால் அப்பகுத்தியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் ஸ்தம்பித்தனர். இதற்குக் காரணம் என்னவென்று விசாரிக்கையில்,

வேதாரண்யம், ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது பாண்டியன் என்பவரின் கார் மோதி விபத்துக்குள்ளாகக்கியது. இதில், ராமச்சந்திரன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..அதேவேளையில் பாண்டியனின் கார் டிரைவர் அந்த காருடன் வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது, வந்த ஒரு பத்து பேர் காவல் நிலையத்தில் கல்வீசியும், அந்த காரை சேதப்படுத்தியும் அந்த காரை எரித்துவிட்டனர்.

தகவல் அறிந்து வந்த உடன் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முற்பட்ட போது. அவர்களை அக்குறிப்பிட்ட பிரிவினர் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால், கார் முழுவதும் ஏரிந்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்னொரு தரப்பினர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. பேருந்துகள் சில நிறுத்தப்பட்டன. பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் மதுரையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சென்னையில் நடந்த போராட்டத்தில் போலீஸ்காரர்களுக்கும் விசிக கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், ‘சிலையை உடைத்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படவேண்டும். தமிழகம் சாதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க அனைவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.’ என கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில் உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலையை தமிழக அரசு சார்பில் பலத்த பாதுகாப்போடு பேருந்து நிலையத்தில் மீண்டும் நிறுவபட்டது. தற்போது பேருந்துகள் வேதாரண்யத்தில் வாழக்கம் போல ஓடுகின்றன. பதற்றமான நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

30 minutes ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

56 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago