வேல்முருகனின் சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கு ரத்து!

Velmurugan

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடில் தாக்குதலில் ஈடுபட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற கோரி கடந்த 2018ம் ஆண்டு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.

இந்நிலையில், போரட்டம் நடத்தியபோது தாக்குதலில் ஈடுபட்டதால், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனால், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay