துணைவேந்தர் நியமனம் மசோதா – மாற்றங்கள் என்னென்ன? இதோ உங்களுக்காக!

Published by
பாலா கலியமூர்த்தி

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவின் மாற்றங்கள் என்னென்ன? என்பதை காணலாம்.

உதகையில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்து வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்டமசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். எனவே, பல்கலைக்கழக துணைவேந்தர்களை இதுவரை ஆளுநர் நியமித்து வந்த நிலையில், நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மூலம் இனி தமிழக அரசே நியமிக்கும். தெலங்கானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கிறது என்று தமிழக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், துணைவேந்தர் நியமனம் மசோதா மூலம் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, இந்த மசோதா மூலம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில் தமிழக அரசே நியமிக்கும். இதுவரை ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் உள்ள துணைவேந்தர்கள் நியமனம், இனி தமிழக அரசின் நேரடி அதிகாரத்திற்கு வரும். இதுவரை தேர்வுக்குழு பரிந்துரைக்கும் 3 பேரில் ஒருவரை ஆளுநர், துணைவேந்தராக நியமிப்பார்.

இனி தேர்வுக்குழு பரிந்துரை மீது தமிழ்நாடு அரசே இறுதி முடிவு எடுக்கும். துணைவேந்தர் நியமன முறை மாற்றப்பட்டாலும், இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரே நீடிப்பார். இந்த மசோதாவின்படி, துணைவேந்தர்களை ஆளுநர் தன்னிச்சையாக நீக்க முடியாது. துணைவேந்தர்கள் மீது புகார் எழுந்தால் உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான குழு விசாரணை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

6 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

7 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

7 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

8 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

9 hours ago