விஷயமே தெரியாமல் முந்திக்கொண்டு அறிக்கையை வெளியிட்ட விஜயகாந்த் !

Published by
Venu

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை  பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தமிழ்நாடு திரும்பி வந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.அரசியலில் அவ்வப்போதுதான் தான் தனது முகத்தை வெளிக்காட்டி வருகிறார்.முக்கிய முடிவுகள் ,வாழ்த்து செய்திகள் அனைத்தும் அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறார்.

 

இந்த நிலையில் நேற்று விஜயகாந்த் சார்பாக நதிநீர் இணைப்புக்கு ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதா நிறைவேற்றியதை வரவேற்று அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டது.அந்த அறிக்கையில்,  மத்திய,மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி மழைக்காலங்களில் வரும் பெருவெள்ளம் கடலில் கலப்பதை தடுத்து,மழைநீரை சேமித்தாலே தமிழகம் செழிக்கும். அதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை பகிர்ந்து அளிக்க கூடிய அளவு நதிகளை இணைத்து, நீர் நிலைகளை உயர்த்துவதற்கு நதிநீர் இணைப்பு மிக அவசியம் என்று   அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்க முடிவு செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.

அதாவது  நதிநீர் ஆணையங்கள் மொத்தம் 9 உள்ளது . அனைத்து ஆணையங்களையும் ஒன்றிணைத்து ஒரே தீர்ப்பாயம்  அமைக்கும் நோக்கில் தான் இந்த மசோதாவில்  நிறைவேற்றம் செய்யப்பட்டது.

ஆனால் தவறுதலாக விஜயகாந்த் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸின் 86வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில்,…

14 minutes ago

வரலாற்றில் முதன்முறையாக… செஸ் இறுதிப்போட்டியில் 2 இந்திய வீராங்கனைகள் மோதல்.!

ஜார்ஜியா : வரலாற்றில் முதன்முறையாக, மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இரு இந்திய வீராங்கனைகள், கோனேரு ஹம்பி மற்றும்…

22 minutes ago

இந்தியா – இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.!

லண்டன் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஜூலை 23-26, 2025 அன்று இரு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில்…

1 hour ago

4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாம்…

2 hours ago

பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்.!

அமெரிக்கா : பிரபல முன்னாள் WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) தனது 71வது வயதில், நேற்றைய…

2 hours ago

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!

டெல்லி : தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் பதவியேற்கின்றனர். அதன்படி, தி.மு.க…

3 hours ago