மறைந்த சில நாட்களிலேயே விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்!

Published by
பாலா கலியமூர்த்தி

நடிகர், தேமுதிக நிறுவன தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், அரசியலில் ஒரு துணிச்சலான, தைரியசாலியை இழந்துவிட்டோம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

ஏனென்றால், ஜெயலலிதா, கலைஞர் இருக்கும் காலத்திலேயே அரசியல் களம் கண்டவர் கேப்டன் விஜயகாந்த். இதனால், அவரது அரசியல் பயணம் பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. இருப்பினும், சமீப காலமாக விஜயகாந்துக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால், அரசியலில் சற்று விலகியே இருந்தார்.

அவ்வபோது, தொண்டர்களை சந்திப்பது என இருந்து வந்த விஜயகாந்த், சமீபத்தில் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது, அவரை பார்க்கும்போது மனம் வருந்தியது. இதையடுத்து உடல்நல குறைவால் விஜயகாந்த் காலமானார். இவரது பிரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இன்று முதல் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள்.!

விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் (ட்விட்டர்) கணக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, விஜயகாந்தின் பெயரை நீக்கிவிட்டு, தனது பெயரை மாற்றியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்த் மறைந்து சில நாட்களிலேயே அவரின் சமூக வலைதள கணக்கின் பெயர் நீக்கப்பட்டு அவரின் மனைவி பிரேமலதா பெயருக்கு அந்த கணக்கு மொத்தமாக மாற்றப்பட்டிருப்பது நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இடையே பேசும்பொருளாக மாறியுள்ளது. விஜயகாந்தின் கணக்கிற்கு 2 லட்சத்து 33 ஆயிரத்திற்கு 750 பின்தொடர்பாளர்கள் இருந்தனர். இப்போது அந்த கணக்கை அவரின் மனைவி பயன்படுத்தி வருகிறார்.

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

6 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

7 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

8 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

10 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

10 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

11 hours ago