அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கைக்கு அவசியமில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published by
மணிகண்டன்
  • 2017 ஆம் ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் மறு மதிப்பீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
  • இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கையை மறுத்து வருமான வரித்துறையினர் அறிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 2011 – 12 ஆண்டு முதல் 2018 – 19 ஆண்டு வரை உள்ள வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. அப்போது 12 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த 12 பேரில் 5 பேரிடம் மட்டுமே விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வருமான வரித்துறை அணை அனுமதித்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள 7 பேரிடம் குறுக்கு விசாரணை செய்ய வருமான வரித்துறையினர் அனுமதிக்கவில்லை என கூறப்பட்டு, அவர்களிடம்  குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் விஜயபாஸ்கர் தரப்பு மனு அளித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்,  விசாரிக்கையில் விஜயபாஸ்கர் தரப்பானது வருமான வரித்துறையினர் கூறிய 12 சாட்சியங்களில் 7 பேரிடம் விசாரிக்க அனுமதி வேண்டும் எனவும், சேகர் ரெட்டி, சீனிவாசலு, மாதவ் ராவ் உள்ளிட்ட 7 பேரிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இது குறித்து பதிலளித்த வருமான வரித்துறை,  விஜயபாஸ்கர் தரப்பு கூறிய 7 பேரில் 2 பேரிடம் ஏற்கனவே குறித்து விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்துள்ளது. எனவும், சேகர் ரெட்டி, மாதவராவ், வெங்கடேசன் ஆகியோரிடம் தாங்கள் எந்தவித விசாரணையும் செய்யவில்லை. அவர்களிடம் எழுத்துப்பூர்வ அறிக்கை எதுவும் வாங்கவில்லை எனவே அவர்களிடம் விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய தேவையில்லை எனவும் கூறப்பட்டது.

இதற்கு விஜயபாஸ்கர் தரப்பினர், சேகர் ரெட்டி அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் ஆவணங்களின் நகலை வருமான வரித்துறை தங்களுக்கு தருமாறு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வருமான வரித்துறையினர் அறிக்கையை ஏற்று விஜயபாஸ்கரின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

6 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

8 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

9 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

9 hours ago