விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு!

Published by
பால முருகன்

விக்கிரவாண்டி : தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6- ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து, காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10-இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 14-ஆம் தேதி துவங்கியது. இதுவரை, மொத்தமாக  64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழகர் கட்சி சார்பில் அபிநயா, பாமக சார்பில் சி.அன்புமணி, ஆகியோர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு வேட்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக போட்டியிடவில்லை. ஜூன் 14-ஆம் தேதி  துவங்கிய இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம்  இன்று (ஜூன் 21) -ஆம் தேதி  3 மணியுடன் நிறைவடைந்துள்ளது. வரும் 24 ஆம் தேதி இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. அதைப்போல, வரும் 26-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள்.

மேலும், இந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்று, தேர்தலுக்கான முடிவுகள் ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

22 minutes ago

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…

2 hours ago

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

3 hours ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

3 hours ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

4 hours ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

5 hours ago