விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் : திமுக வேட்பாளர் முன்னிலை.!

Published by
மணிகண்டன்

இடைத்தேர்தல் முடிவுகள்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி (புதன் கிழமை) அன்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட்டுள்ளார். பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டுள்ளார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. மொத்தம் 29 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 2.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 552 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ண தொடங்கப்பட்டன.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. மொத்தம் 789 தபால் வாக்குகள் பதிவாகின. அவைகள் 2 மேசைகளில் எண்ணப்பட்டன. அதன் பின்னர் மிண்ண்னு வாக்குப்பதிவு எண்ணிக்கை 14 மேசைகளில் 20 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 134 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எண்ணும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

14 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

14 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

15 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

15 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

16 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

16 hours ago