கொரோனா பாதிக்கப்பட்ட நபர் என இணையத்தில் வைரலான வீடியோ! வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்!

Published by
லீனா

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு தமிழகம் வந்துள்ளார் . இவர் மதுரை நகரில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து இவருக்கு சளி, இருமல், சோர்வு ஆகியவை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில்,  சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலை பெற்ற பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் அவரையும், அவரது தாயாரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் 2 மணி நேரங்கள் தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் சரக்கு வாகனம் ஒன்றை தயார் செய்து இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் சோர்வாக அமர்ந்திருப்பது சரக்கு வாகனத்தில் ஏறிச் செல்வது போன்றவற்றை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, முஸ்தபாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இல்லை என கூறி அவரையும் அவரது தாயாரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் மக்கள் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

வீட்டிற்கு வந்த முஸ்தபா தன்னை குறித்து இணையத்தில் வைரலான வீடியோவை பார்த்து, மனவேதனை அடைந்து, நேற்று காலை சென்னையிலிருந்து நெல்லைக்கு சீனி மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரது உடலை மீட்டு, மதுரை ரயில்வே துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Published by
லீனா

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago