விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணியின்போது,கம்பி அறுந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது விழுந்தது.
விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில்,சென்னையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தொட்டியங்குளம் பகுதிக்கு வந்த நேரத்தில்,அந்த பகுதியில் தாழ்வாக இருந்த மின் இணைப்பு கம்பி அறுந்து ரயில் மீது விழுந்தது.
உடனே ரயிலை இயக்கியவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் ரயில் தடம் புரல்வது தவிர்க்கப்பட்டது.குறிப்பாக,மின் இணைப்பு கொடுக்கப்படாததால் சென்னை – செங்கோட்டை ரயிலில் சென்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து,எஞ்சின் பகுதியை மின் கம்பி சுற்றியதால் அந்த மின் கம்பியை அகற்றும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து,சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ரயில் தாமதமாக சற்று முன்னர் புறப்பட்டு செங்கோட்டை நோக்கி சென்றுள்ளது.
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…
அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…