தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுக – பாஜக இடையே இழுபறி இல்லை என்று பாஜக மாநில எல் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுக – பாஜக இடையே இழுபறி இல்லை என்றும் இரண்டு நாளில் தொகுதி பங்கீடு இறுதியாகும் எனவும் கூறியுள்ளார். கூட்டணியில் தேமுதிக நிலை பற்றி அதிமுகத்தான் முடிவு எடுக்கும் என்றும் முக ஸ்டாலின் சொல்வதை போல் பாஜகவில் ரவுடிகள் பட்டியல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பேசிய எல் முருகன், 70 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் திமுக செய்யாத விஷயத்தை பாஜக இரண்டே வருடத்தில் செய்துள்ளது. ஏழை மக்களுக்கு இலவசமாக கேஸ் கனக்சன் கொடுத்தது பாஜக தான். இதுபோன்று பல சாதனைகள் பாஜக அரசு செய்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நேற்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதன்பின் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். ஆனாலும், இன்னும் சுலபமான முடிவு எட்டப்படவில்லை, பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…