இன்று காலை 10 மணி அளவில் சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜகவில் இணைக்கிறார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். பதவி நீக்கினார். இதனால், துணைப் பொதுச்செயலாளராக அந்நியூர் செல்வராஜை மு.க.ஸ்டாலின் நியமித்தார். இதுகுறித்து வி.பி.துரைசாமி கூறுகையில், பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, எனக்கு ஏற்கனவே தெரியும். தி.மு.க.வில் எனக்கு சிலர் எதிராக சதி செய்துள்ளனர் என கூறினார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜகவில் இணைக்கிறார். இதுகுறித்து வி.பி.துரைசாமி கூறுகையில், திமுகவின் அடிமட்ட தொண்டன் பொறுப்பில் இருந்து என்னை நீக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன். பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால்தான் நாட்டை காப்பாற்ற முடியும். பாஜகவின் கொள்கைகளை ஏற்றே அதில் இணைகிறேன். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்து கட்சியில் இணைகிறேன் என அவர் தெரிவித்தார்.
சமீபத்தில், தமிழக பா.ஜ., தலைவராக முருகன் நியமிக்கப்பட்டார். அவரை வி.பி.துரைசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால், பா.ஜ.,வில் துரைசாமி சேரப்போவதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…