தமிழ்நாடு

‘பொறுத்திருந்து பாருங்கள்’ – பாஜவுடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு – எடப்பாடி பழனிசாமி

Published by
லீனா

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சேலம் மாவட்டம்  எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹2.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பாஜவுடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு. கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி நீடிக்கும் என வி.பி.துரைசாமி கூறியது குறித்து அவரிடமே கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து அமையவுள்ள கூட்டணி குறித்து பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி முறிவால் வாக்குகள் சிதறாது. தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். எந்தெந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்பதை நாங்கள் பின்னர் அறிவிப்போம்.

தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 95 சதவிகித வாக்குறுதிகள் நிரைவேற்றப்பட்டு விட்டதாக பச்சை பொய்யை கூறிக் கொண்டிருக்கிறார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விவசாயிகளின் நலன் குறித்த கோரிக்கைகளை முன்வைக்க தான் சந்தித்தனர். நிர்மலா சீதாராமணி சந்தித்தற்கும், கூட்டணி குறித்த பேச்சுக்கும் சம்பந்தமில்லை. திமுக மச்சாள் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்களை சந்த்தித்தால் கூட்டணி என அர்த்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

I.N.D.I.A கூட்டணி என்பதே நாடகம்தான், இன்னும் முழு வடிவம் பெறவில்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உண்மையிலேயே டெல்டா பாசன விவசாயிகள் மீது, தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்தால், ஒவ்வொரு மாதமும் நீதிமன்றம் அளித்த அழிவுறுத்தலின் படி, கர்நாடகா அணையில் இருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் கும்பகரணம் போல தூங்கி விட்டார். காவிரி நீரை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

12 minutes ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

35 minutes ago

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

1 hour ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

2 hours ago

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago