தூத்துக்குடியில் பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மருத்துவமனை வளாகத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு லாரி ஒன்று வந்துள்ளது . ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான லாரியை ரமேஷ் குமார் என்பவர் ஒட்டியுள்ளளார் . மேலும் லாரியின் கிளீனராக லட்சுமணன் என்பவரும் உடன் இருந்துள்ளார் . இந்த நிலையில் இன்று அதிகாலையளவில் லாரியானது தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு வர புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலத்தில் ஏறியுள்ளது . அப்போது லாரியை பாலத்தில் வைத்து வலது பக்கம் ஓட்டுநர் திருப்பியுள்ளார் . இதனால் நிலை தடுமாறிய லாரி பாலத்தில் இருந்து தலைக்கீழாக கவிழ்ந்துள்ளது . தனியார் மருத்துவமனை ஒன்று லாரி கவிழ்ந்த பகுதியில் இருந்துள்ளது .
ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி கவிழ்ந்த தனியார் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை. எனவே எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை . மேலும் மருத்துவனையின் வாட்ச்மேன் அறையில் இருந்து கொள்ளாமல் வெளியே அமர்ந்திருந்ததால் நூலிழையில் உயிர் தப்பினார் . மேலும் லாரி கவிழ்ந்ததில் லாரிக்குள் இருந்த லட்சுமணன் அவர்கள் காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . மேலும் இதுகுறித்த விசாரணையை தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் நடத்தி வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…