தூத்துக்குடியில் மருத்துவமனை வளாகத்தில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து .!நூலிழையில் உயிர் தப்பிய வாட்ச்மேன்.!

Published by
Ragi

தூத்துக்குடியில் பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மருத்துவமனை வளாகத்தில்  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு லாரி ஒன்று வந்துள்ளது .  ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான லாரியை ரமேஷ் குமார் என்பவர் ஒட்டியுள்ளளார் . மேலும் லாரியின் கிளீனராக லட்சுமணன் என்பவரும் உடன் இருந்துள்ளார் . இந்த நிலையில் இன்று அதிகாலையளவில் லாரியானது தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு வர புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலத்தில் ஏறியுள்ளது .  அப்போது லாரியை பாலத்தில் வைத்து வலது பக்கம் ஓட்டுநர் திருப்பியுள்ளார் . இதனால் நிலை தடுமாறிய லாரி பாலத்தில் இருந்து தலைக்கீழாக கவிழ்ந்துள்ளது .  தனியார் மருத்துவமனை ஒன்று லாரி கவிழ்ந்த பகுதியில் இருந்துள்ளது .

ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி கவிழ்ந்த தனியார் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை. எனவே எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை . மேலும் மருத்துவனையின் வாட்ச்மேன் அறையில் இருந்து கொள்ளாமல் வெளியே அமர்ந்திருந்ததால் நூலிழையில் உயிர் தப்பினார் . மேலும் லாரி கவிழ்ந்ததில் லாரிக்குள் இருந்த லட்சுமணன் அவர்கள் காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . மேலும் இதுகுறித்த விசாரணையை தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் நடத்தி வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago