தூத்துக்குடியில் பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மருத்துவமனை வளாகத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு லாரி ஒன்று வந்துள்ளது . ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான லாரியை ரமேஷ் குமார் என்பவர் ஒட்டியுள்ளளார் . மேலும் லாரியின் கிளீனராக லட்சுமணன் என்பவரும் உடன் இருந்துள்ளார் . இந்த நிலையில் இன்று அதிகாலையளவில் லாரியானது தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு வர புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலத்தில் ஏறியுள்ளது . அப்போது லாரியை பாலத்தில் வைத்து வலது பக்கம் ஓட்டுநர் திருப்பியுள்ளார் . இதனால் நிலை தடுமாறிய லாரி பாலத்தில் இருந்து தலைக்கீழாக கவிழ்ந்துள்ளது . தனியார் மருத்துவமனை ஒன்று லாரி கவிழ்ந்த பகுதியில் இருந்துள்ளது .
ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி கவிழ்ந்த தனியார் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை. எனவே எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை . மேலும் மருத்துவனையின் வாட்ச்மேன் அறையில் இருந்து கொள்ளாமல் வெளியே அமர்ந்திருந்ததால் நூலிழையில் உயிர் தப்பினார் . மேலும் லாரி கவிழ்ந்ததில் லாரிக்குள் இருந்த லட்சுமணன் அவர்கள் காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . மேலும் இதுகுறித்த விசாரணையை தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…