எந்த மொழிக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளது என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில், தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து, வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாளான இன்று, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகளின் நினைவுகளை முன்னிட்டு, திமுக மாணவர் அணி சார்பில் ஏற்பாடு செய்ப்பட்ட மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மொழிப்போர் தியாகிகளே உங்கள் தியாகம் தான்  இன்றும் எங்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

மொழிப்போர் தியாகிகளால் தமிழினம் மேன்மை அடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்தி திணிப்பு அதிகரித்த போது எல்லாம் போராடி ஏராளமானோர் சிறைவாசம் அனுபவித்தனர். எனவே, தமிழ், தமிழ் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல, இந்தி உள்பட எந்த மொழிக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல, அதனை பிறர் மீது திணிக்கும் ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜிக்கே இந்தித்திணிப்பு எதிர்ப்பில் தமிழர்களைப் பற்றி புரிந்துகொள்ள 25 ஆண்டுகள் ஆனது, என்றால் இன்றைய பாஜகவினருக்கு எதனை நூற்றாண்டு ஆகும் என்று தெரியவில்லை.

எந்த நோக்கத்திற்காக தி.மு.க தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தில் இருந்து தி.மு.க எப்போதும் பின் வாங்காது. இதுதான் தமிழின் ஆட்சி! இதுதான் தமிழினத்தின் ஆட்சி! இதுதான் பெரியாரும், பாரதிதாசனும் அண்ணாவும், கலைஞரும் விரும்பிய ஆட்சி. கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி-யை யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார்? இவர்கள் சொல்லும் சிப்பாய் கலகத்திற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே 1806ல் வேலூர் புரட்சி நடந்திருக்கிறது.

இந்த வீரர்களை பற்றித் தெரியாத இவர்களா, தமிழின், தமிழர்களின் உணர்வை புரிந்துகொள்ளப் போகிறார்கள். கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

9 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

9 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

10 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

11 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

11 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

11 hours ago