தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கட்டாயப்படுத்தினாலும் தவறில்லை.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த இதுவரை 3 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தற்போது தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. எனவே, கூடுதல் தடுப்பூசி வேண்டி முதல்வர் அவர்கள் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு தடுப்பூசி அனுப்பினால், 4-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். தமிழகத்தில் தடுப்பூசி முகாமை தடுப்பூசி திருவிழாவை போல் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் சாரை, சாரையாக வந்து தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கட்டாயப்படுத்தினாலும் தவறில்லை என தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…