தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக, திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு.
ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றது. இதனால் தமிழகத்தில் 13 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்ஐ தாண்டி வெயில் கொளுத்தியது.
இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக, திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு. மேலும், தமிழகத்தில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இதில், வேலூர்- 108.4, மீனம்பாக்கம்- 106.1 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தி- 104.3 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம்- 103.6 டிகிரி ஃபாரன்ஹீட், நுங்கம்பாக்கம்- 103.2 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை விமான நிலையம்- 102.9 டிகிரி ஃபாரன்ஹீட், கடலூர்- 102.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
மேலும் புதுச்சேரி, நாகையில்- 102.2 டிகிரி ஃபாரன்ஹீட், தர்மபுரியில் 101.4 டிகிரி ஃபாரன்ஹீட், பரங்கிபேட்டை- 101.3 டிகிரி ஃபாரன்ஹீட், நாமக்கல்- 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…