“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ​​கல்விக்கான உதவித்தொகை வழங்குவதை அதிகரிப்போம்”- ராகுல் காந்தி!

Published by
Surya

பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி பேராசிரியர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ​​கல்விக்கான உதவித்தொகை வழங்குவதை அதிகரிப்போம் என தெரிவித்துள்ளார்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதன்காரணமாக அந்த 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். அங்கு வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பலர், உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி நடத்தினார்.

இதனைதொடர்ந்து இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கல்வி முறைக்கு ஒரு கொள்கையை நாம் உருவாக்க வேண்டும் என்றால், அது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான உரையாடலிலிருந்து வர வேண்டுமென கூறினார்.

மேலும், பொருளாதார ரீதியில் வலுவானவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை என கூறிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ​​கல்விக்கான உதவித்தொகை வழங்குவதை அதிகரிப்போம் என தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து ராகுல் காந்தி, திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்தார். அதுதொடர்பான விடியோவினை தமிழக காங்கிரஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

1 hour ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

4 hours ago