இளமையான இனிமையான உங்கள் குரலை மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் சீமான் ட்வீட்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து வருகின்றனர். உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில்,நேற்று அவரது மகன் சரண் கூறுகையில் அப்பா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது ட்வீட்டர் பதிவில், என்றும் இளமையான இனிமையான உங்கள் குரலை மீண்டும் கேட்டு இரசித்து மகிழ ஆவலோடு காத்திருக்கிறோம். மீண்டு வருவீர்கள், நாங்கள் கேட்டு மகிழ்வோம் என்ற பெரும் நம்பிக்கையோடு விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…