தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை எனும் நிலையை உருவாக்க வேண்டும் – முதல்வர்!

Published by
Rebekal

தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் இது குறித்து தற்பொழுது காணொலி காட்சி மூலமாக பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ஒரு வாரம் தமிழகத்தில் போடப்பட்டுள்ள முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதாக கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை எனும் நிலையை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நாளை முதல்வர் கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விடுத்து பசியால் வாடுபவர்களுக்கு பசி போக்கும் உன்னத பணியில் ஈடுபட வேண்டும் எனவும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு வழங்க கூடிய பணியை மேற்கொள்ள வேண்டுமெனவும் திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இது குறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

6 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

7 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

10 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

10 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

11 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

11 hours ago