நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை மறைவு...! தமிழக முன்னாள் முதல்வர் இரங்கல்...!

Former Chief Minister of Tamil Nadu and Leader of the Opposition Edappadi Palanisamy has condoled the death of Seeman's father.

தமிழகத்தின் முன்னாள்  முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், சீமான் அவர்களின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் காலமானார். இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள்  முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் தந்தை திரு. செந்தமிழன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

திரு.செந்தமிழன் அவர்களை இழந்துவாடும் திரு.சீமான் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node