சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.டி.ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவரின் அனுமதி படம் பிடிப்பது குற்றம், வீடியோ எடுத்தவரை கைது செய்திருக்க வேண்டும்.
உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என கூறினார். கே.டி.ராகவனை ஆதரித்து பேசியதற்கு சீமான் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கே.டி. ராகவனுக்கு சீமான் ஏன் ஆதரிக்கிறார் என செய்தியாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அண்ணாமலை சீமான் பேச்சை சீரியஸாக்க வேண்டாம்.
சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…