மீண்டும் அஇஅதிமுக ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம் என எம்ஜிஆர் பிறந்தநாளில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பலர் வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். ஒரு சிலர்தான் வரலாறாகவே வாழ்கிறார்கள். அந்த ஒரு சிலரில் ஒருவரான மறைந்த மாமனிதர், வாரி வழங்கி வாழ்நாளெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மகிழும் வண்ணம் ஆட்சி நடத்தியவர், சாமானியனின் கருத்திற்கு மதிப்பளித்தவர், சாமானிய மக்களுக்காக சட்டங்களை இயற்றியவர், திட்டங்களைத் தீட்டியவர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், மனிதப் புனிதர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், ‘பாரத ரத்னா’, மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வழியில், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் விரைவில் ஏற்படுத்துவோம் என இந்த நன்னாளில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…