அலைகடலென வரவேற்பு., அம்மா ஆட்சியை சசிகலா தலைமையில் அமைப்போம் – டிடிவி தினகரன்

Published by
பாலா கலியமூர்த்தி

திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது – டிடிவி தினகரன் 

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா பெங்களூரில் 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு தமிழகத்துக்கு வரும் 7-ஆம் தேதி திரும்பி வருகிறார். அதனால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள், தமிழக மக்கள் சசிகலா நல்லவிதமாக வந்து சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை உள்ள கழக தொண்டர்கள் தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை அலைகடலென திரண்டு இருந்து சசிகலாவை வரவேற்க தயாராகி வருகிறார்கள். எனவே, சசிகலாவுக்கு அளிக்கும் வரவேற்பால் யாருக்கும் கெட்ட பெயர் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருக்கும் எந்த சொந்தரவும் இல்லாமல் வரவேற்பு அளிக்க வேண்டும். இந்த ஆட்சியை அமைத்துவிட்டுத்தான் சசிகலா சிறைக்கு சென்றார்.

உண்மையான குற்றவாளி யார் என்று தமிழக மக்களுக்கு தெரியும். சசிகலாவின் விடுதலை நாளன்று, அம்மாவின் நினைவிடம் திறக்கப்பட்டது. இது சின்னம்மாவை வரவேற்கும் விதமாக அன்று நினைவிடம் திறக்கப்பட்டதாக நான் நினைக்கிறன். சசிகலா விடுதலை என்ற செய்தி வரத் தொடங்கியதும், தமிழகத்தில் கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டுள்ளது. எப்படியும் சசிகலா இந்த ஒரு வாரத்தில் வந்துவிடுவார் என்ற அம்மா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று போய்விடுமா? ஜெயலலிதா நினைவிடம் எப்படியும் திறந்தாக வேண்டும், அப்போது, சென்று மரியாதையை செலுத்துவார். இதற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் நிச்சியம் தீர்ப்பு வழங்குவார்கள். கே.பி முனுசாமி மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைக்க பரிசீலினை செய்யப்படும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, யார் தவறு செய்தவர்கள், யார் மன்னிப்பு கேட்க கூடியவர்கள், யார் மன்னிக்கபட வேண்டியவர்கள், என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

தீயசக்தி திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. சசிகலா தலைமையில் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம். உண்மையான தொண்டர்கள், விசுவாசத்தின் பக்கம் உள்ளவர்கள் சசிகலா பக்கம் இருக்கிறார்கள். சசிகலாவின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் முடிவு செய்யும் வரை பொறுத்திருப்போம். அதிமுகவை மீட்டெடுக்க சட்டப்போராட்டத்தை சசிகலா தொடருவார் என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

1 hour ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

1 hour ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

2 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

3 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

3 hours ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

4 hours ago