நவராத்திரிக்கு ஒன்பது நிற உடையில் வரவேண்டுமென யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் சுற்றறிக்கைக்கு சு.வெங்கடேசன் கண்டனம்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி இருப்பதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நவராத்திரிக்கு ஒன்பது நிற உடையில் வா! உள்ளாவிட்டால் தண்டம் கட்டு. இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா? என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், யூனியன் பாங்க் ஆப் இந்தியா அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் ஏ.ஆர் ராகவேந்திரா என்பவர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென ஒரு சுற்றறிக்கையை கடந்த 1ம் தேதி வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டுமாம், விடுமுறை நாளாக இருந்தாலும், யார் இவருக்கு அதிகாரம் தந்தது. ஊழியரின் விதி முறைகளில் எந்த சரத்தின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்?.
நவராத்திரியை நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால், எல்லாரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல்,அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல். நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக இதில் தலையிட வேண்டும். உடனடியாக சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…