மு.க. அழகிரி அவர்களும் பாஜகவில் இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து அரசியலில் பரபரப்bjpபை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தலைமையில் மக்கள் ஆசி யாத்திரை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,மக்கள் ஆசி யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன்:”தமிழகத்தில் தாமரை மலர போகும் நாள் உருவாகப் போகிறது.ஏனெனில்,முன்னதாக திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த அண்ணன் வி.பி.துரைசாமி,முன்னாள் திமுக எம்பி ராமலிங்கம் ஆகியோர் பாஜகவிற்கு வந்துள்ளனர்.நாம் ஒரு நாளை உருவாக்கப் போகிறோம். விரைவில் மதுரையிலிருந்து அண்ணன் அழகிரி அவர்களும் பாஜகவில் இணையும் நாளை நாம் உருவாக்கி காட்டுவோம். இன்று நான்கு இடங்களைப் பெற்றுள்ள நாம் வருங்காலத்தில் 140 இடங்களை பெறுவோம்”, என்றார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…