என்னது…மு.க.அழகிரி பாஜகவில் இணைகிறாரா? – முன்னாள் மத்திய அமைச்சரின் கருத்தால் பரபரப்பு..!

Published by
Edison

மு.க. அழகிரி அவர்களும் பாஜகவில் இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து அரசியலில் பரபரப்bjpபை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தலைமையில் மக்கள் ஆசி யாத்திரை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,மக்கள் ஆசி யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன்:”தமிழகத்தில் தாமரை மலர போகும் நாள் உருவாகப் போகிறது.ஏனெனில்,முன்னதாக திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த அண்ணன் வி.பி.துரைசாமி,முன்னாள் திமுக எம்பி ராமலிங்கம் ஆகியோர் பாஜகவிற்கு வந்துள்ளனர்.நாம் ஒரு நாளை உருவாக்கப் போகிறோம். விரைவில் மதுரையிலிருந்து அண்ணன் அழகிரி அவர்களும் பாஜகவில் இணையும் நாளை நாம் உருவாக்கி காட்டுவோம். இன்று நான்கு இடங்களைப் பெற்றுள்ள நாம் வருங்காலத்தில் 140 இடங்களை பெறுவோம்”, என்றார்.

Published by
Edison

Recent Posts

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

48 minutes ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

2 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

2 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

4 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

5 hours ago