முருகன் கூறியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது – அண்ணாமலை விளக்கம்

முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தேசிய தலைமை தான் அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறிவிட்டது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என்று கூறினார்.ஏற்கனவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது பேச்சு அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை கூறுகையில் , அதிமுக -பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்று கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தேசிய தலைமை தான் அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறிவிட்டது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.அதிமுக நண்பர்கள் கவனத்துடன் பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025