நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக பிரதமர் மோடி காணொளிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு முக்கிய அம்சங்களை தெரிவித்துள்ளார். இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு என கூறினார். நீடிக்கப்பட்ட ஊரடங்கு காலகட்டத்திற்கான புதிய வழிமுறைகள் நாளை வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார். அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும்போது தனிமனித இடைவெளி அவசியம் என்றும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை விரட்ட அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் கூறிருந்தார்.
இந்நிலையில், ஆறுதல் தரும் வகையிலான உரையை பிரதமர் மோடி எப்போது ஆற்ற போகிறார் என்றும் மருத்துவ உபகரணங்கள், நோய் கண்டறியும் கருவிகள் எப்பொழுது தருவீர்கள்.? மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பிரதமர் மோடி வழங்கிய 7 அறிவுரைகள் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டுமல்ல, நிவாரண உதவிகள் மற்றும் பொருள் உதவிகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள்? என முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…