விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் : ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்.!

Published by
மணிகண்டன்

விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த சில வாரங்களாக விக்கிரவண்டியில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாஜக தலைமையிலான NDA கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுகிறார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. இதனால் விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இன்று இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் செய்து வந்தார். பாமக வேட்பாளரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்து வந்தார்.  அதே போல நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சி தலைவர் சீமான் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை சத்து வந்தார்.

நாளை மறுநாள் (ஜூலை 10) இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், இன்று (ஜூலை 8) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவுபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல அரசியல் தலைவர்கள் தங்கள் தேர்தல் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தற்போது நிறைவு செய்துள்ளனர். இன்று மாலைக்கு மேல் வெளியூர் ஆட்கள் தொகுதிக்குள் இருக்க அனுமதியில்லை என்பதால் வெளியூர் அரசியல் கட்சியினர் விக்கிரவாண்டியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நிறைவுபெற்று ஜூலை 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

15 minutes ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

39 minutes ago

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…

2 hours ago

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

3 hours ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

4 hours ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

4 hours ago