கல்வியில் சிறந்த நாடு தென்கொரியா, அந்த கல்வியை நாங்கள் கொண்டுவருவோம் என்றும், தரமான கல்வியையும் தரமான மருத்துவத்தையும் நாங்கள் தருவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ஓசூரில் வேட்பாளர் கீதாலட்சுமி அவர்களை ஆதரித்து பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திராவிட கட்சிகள், தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 6 லட்சம் கோடி கடனில் தமிழகம் உள்ளது. இதனை யார் தள்ளுபடி செய்வார்கள்? ஒரு நாட்டில் விவசாயிகள் ஏன் கடனாளியாகி கடன் வாங்கி விவசாயம் செய்கிறான்? அவனை இந்த நிலைமைக்கு தள்ளியது யார்? தன் வீட்டில் நகை அடமானம் வைக்கும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது யார்? இந்த ஆட்சியாளர்கள் தானே, அதனால் தான் அவர்களை முற்றிலுமாக அகற்றி விட்டு புதிய ஆட்சி முறையை கொண்டுவரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கல்வியில் சிறந்த நாடு தென்கொரியா, அந்த கல்வியை நாங்கள் கொண்டுவருவோம் என்றும், தரமான கல்வியையும் தரமான மருத்துவத்தையும் நாங்கள் தருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…