தமிழக விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு அறிவித்தபடி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், புதிய கடனை உடனடியாக வழங்கக்கோரியும் விவசாய முன்னேற்றக்கழகம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்வதாக கூறிவிட்டு, தற்போது ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட கடனையும் கட்ட சொல்கிறது.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, புதிய கடனை உடனடியாக வழங்கவேண்டும் என தெரிவித்தார். வரும் நாட்களில் தமிழக விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றும் பாஜக-அதிமுக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது எனவும் அதிமுக – பாமக இடையே நிலவும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…