தமிழக விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு அறிவித்தபடி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், புதிய கடனை உடனடியாக வழங்கக்கோரியும் விவசாய முன்னேற்றக்கழகம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்வதாக கூறிவிட்டு, தற்போது ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட கடனையும் கட்ட சொல்கிறது.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, புதிய கடனை உடனடியாக வழங்கவேண்டும் என தெரிவித்தார். வரும் நாட்களில் தமிழக விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றும் பாஜக-அதிமுக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது எனவும் அதிமுக – பாமக இடையே நிலவும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…