தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு ஏன்..? அரசு விளக்கம்..!

Published by
murugan

மத்திய உள்துறைச் செயலாளர் சுற்றறிக்கையின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன அமைச்சர் விளக்கம். 

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் வருகின்ற 15ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், மத விழாக்கள் மற்றும் வழிபாடுகள் தொடர்பாக சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்தது.

அதன்படி, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலையை வைப்பதற்கு அனுமதி இல்லை எனவும், விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படாது எனவும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ காந்தி விநாயகர் சதுர்த்திக்கு தளர்வுகள் வழங்க கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த, அமைச்சர் சேகர்பாபு விநாயகர் சதுர்த்திக்கு அனுமதிக்கக்கூடாது என மத்திய உள்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட திருவிழாக்களை வீட்டிலேயே கொண்டாடுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உள்துறைச் செயலாளர் சுற்றறிக்கையின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்று  விளக்கம் கொடுத்தார்.

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

5 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

6 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

7 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

7 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

8 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

8 hours ago