ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் திமுகவிற்கு பலவீனம் கிடையாது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.மேலும் யாரை எங்கு உட்கார வைக்கணுமோ… அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும் என்று பேசினார்.
இந்த நிலையில் விஜய் கருத்து குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கூறுகையில்,நடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் .ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் திமுகவிற்கு பலவீனம் கிடையாது .நடிகர் விஜய் அவர் விருப்பப்பட்டதையும், பேசத் தோன்றியதையும் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமே இணைப்பு மொழியாக வர முடியுமே தவிர, இந்தியாவில் உள்ள எந்த மொழியும் பொதுமொழியாக வர முடியாது என்றும் தெரிவித்துள்ளர்.
ஏற்கனவே கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் ரஜினி மற்றும் விஜய் அரசியல் குறித்த உறுதியான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…