பெருமை பேசாமல், மீனவர்களை காப்பாற்றுமாறு பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் – ஆளூர் ஷா நவாஸ்

Published by
லீனா

பெருமை பேசாமல், மீனவர்களை காப்பாற்றுமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்த வேண்டும் என ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ ட்வீட்.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் பகுதிகளை சார்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 28-ம் தேதி அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நிலையில், இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை அத்துமீறி கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அனைவரும் படகில் படுத்து தங்களை தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளனர். அதில் கலைச்செல்வன் என்ற மீனவரின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். தற்போது நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ தனது ட்வீட்டர் பக்கத்தில், “மோடி ஆட்சியில் ஒரேயொரு மீனவர் மீது கூட இலங்கை கடற்படையால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை” என்று அண்ணாமலை பேசினார். தற்போது நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச்சூட்டிற்கு அவர் என்ன பதில் சொல்வார்? எனவே, பெருமை பேசாமல், மீனவர்களை காப்பாற்றுமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்த வேண்டும்.

மேலும், நமது மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படை மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

10 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

10 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

11 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

12 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

12 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

13 hours ago