பெற்றோர்களுக்கான நிலத்தகராறால் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

பெற்றோர்களுக்கான நிலத்தகராறால் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மகன்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை பூஞ்சோலை என்ற பகுதியை சேர்ந்த ஜோசப் அன்னமேரி என்பவரின் மகள்தான் பிரியா, இவருக்கு 26 வயதாகிறது. ஹோம் நர்சிங் துறையில் பணியாற்றி வந்த இவர், ஊரடங்கால் தற்பொழுது வீட்டில் இருக்கிறார். ஏற்கனவே இவர் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் குடும்பத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கோடன் மல்லிகா என்பவர் குடும்பத்திற்கும் நில சம்பந்தமான பிரச்சனை நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது. இதனால் செங்கோடன் மல்லிகாவின் 28 வயது சின்னண்ணன் எனும் இளைய மகன் பிரியாவுக்கு இந்த பிரச்சனையை காரணம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
காட்டு பகுதியில் வசித்து வரக்கூடிய ப்ரியாவின் வீட்டில் கழிவறை இல்லாததால் அவர் வெளியில் செல்லும்பொழுது சின்ன கண்ணன் செல்போனில் படம் எடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரியா யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த போது சின்னகண்ணன் அவர்கள் வீட்டிற்கு சென்று பிரியாவுக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார், இதனால் அவரது கை மற்றும் கன்னத்தில் காயம் ஏற்பட்டதாகவும் அவரை மீட்ட உறவினர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், செங்கோடன் குடும்பம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருச்சி டி.ஐ.ஜி ஆனியிடம் பிரியா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025