8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு இன்றைக்கு பாரல் மாதிரி மாறிப்போச்சி…! – திண்டுக்கல் லியோனி

Published by
லீனா

8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு, இன்றைக்கு பாரல் மாதிரி பெருத்து போய் கிடக்கிறது.

திண்டுக்கல் லியோனி கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஊழல் எஸ்.பி.வேலுமணி அராஜகத்துக்கு கார்த்திக் சிவசெனபதி சாவுமணி அடிக்கப் போகிறார். இவர் என்ன செய்தார் என்று நீங்கள் எல்லாம் பார்த்து இருப்பீர்கள்.

மாடுகளில் பல வகையுண்டு. பண்ணையில் இருக்கிற மாடுகளை பார்த்திருக்கிறீர்களா? ஃபாரின் மாடு அது மெஷின் வச்சா தான் பால் கறக்கும். அந்த பாலை குடிச்சு குடிச்சு தான் நம்ம பெண்கள் பலூன் மாதிரி ஊதிப் போய் விட்டார்கள். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. பிள்ளையை தூக்கி வைத்தால், இடுப்பில் உட்கார்ந்து கொள்ளும்.

பாரின் மாடு ஒரு மணி நேரத்தில் 40 லிட்டர் பால் கறக்கும். ஆனால் அதை குடித்து வந்ததால் தான் இன்று பெருசா ஊதி போகவேண்டியதுதான். 8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு, இன்றைக்கு பாரல் மாதிரி பெருத்து போய் கிடக்கிறது. பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுகி போகிறது என்று விமர்சித்தார். மேலும் அவர் பேசுகையில், தாய்ப்பாலுக்கு அடுத்து சுத்தமான பால், நாட்டுமாட்டு பால் தான்.  அந்த நாட்டு மாடுகளை காப்பாற்ற மாபெரும் இயக்கம் நடத்தியவர் தான் கார்த்திக் சிவ சேனாதிபதி என்று பேசியுள்ளார். திண்டுக்கல் லியோனின் இந்த பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

14 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

15 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

16 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

16 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

16 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

17 hours ago