Tamilnadu CM MK Stalin [File Image]
திருவண்ணாமலை பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு, அருணை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 600 படுக்கைகள் கொண்ட புதிய பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
அதன் பிறகு திருவண்ணாமலை மலப்பாம்பாடி கிராமத்தில் வடக்கு மண்டலம் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார்.
600 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
அவர் கூறுகையில், 1967இல் திமுக ஆட்சியமைக்க முதல் அடித்தளமீட்டது. அதற்கு முன் நடைபெற்ற திருவண்ணாமலை இடைத்தேர்தல் தான். அந்த தேர்தல் கொடுத்த வெற்றியில் அடுத்து நாம் (திமுக) ஆட்சியை முதன் முதலாக பிடித்தோம். அந்த இடைத்தேர்தலுக்கு திமுக பொறுப்பாளராக இருந்தவர் தலைவர் கலைஞர் கருணாநிதி.
அதே போல நான் எனது பிரச்சாரத்தை துவங்கியதும் இங்கிருந்து தான். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என நான் தொடங்கிய பிரச்சாரம் என்னையும் முதல்வராக்கி விட்டது. தமிழகத்தில் இதுவரை 4 வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்னும் ஒரே ஒரு வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் சென்னை மண்டலத்தில் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு முன்பிருந்ததை விட, ஆட்சிக்கு வந்த பிறகு இருந்ததை விட, கடந்த 2 மாதங்களில் பெண்கள் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. நமக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என அனைவருக்கும் நமது திட்டம் பயனளிக்கும். நம்மை எதிர்த்தவர்கள் கூட நம்மை பாராட்டுகிறார்கள். அதற்கு காரணம் மாதம் 1000 ரூபாய் தரும் மகளிர் உரிமை தொகை திட்டம் தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…