‘நூறு ரூபாய் கூட வைக்க மாட்டாயா…?’ விரக்தியில் திருடர்கள் செய்த செயல்….!

Published by
லீனா

தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்கள் ஒன்றும் கிடைக்காததால், லிப்ஸ்டிக்கை வைத்து சுவற்றில் ‘100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா?’ என்று எழுதிவிட்டு வந்துள்ளனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, தற்கொலை என பல விபரீதமான செயல்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஜோலார்பேட்டையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உறவினர் வீட்டில், சில நாட்களுக்கு முன்பதாக கொள்ளையர்கள் கொள்ளையடித்ததாக செய்திகள் வெளியானது.

துரைமுருகன் உறவினர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற அவர்கள், ஒன்றும் கிடைக்காததால் அங்குள்ள சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றுள்ளனர். மேலும், அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிசிடிவி பதிவுகளின் மூலம் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, 3 தனிப்படை அமைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது துரைமுருகன் வீட்டின் அருகேயும் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அங்குள்ள தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்று பார்த்த அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காததால், அங்கிருந்த டிவியை உடைத்து விட்டு லிப்ஸ்டிக்கை வைத்து சுவற்றில் ‘100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா?’ என்று எழுதிவிட்டு வந்துள்ளனர். மேலும் அங்குள்ள விலை உயர்ந்த மது பானத்தை அருந்தி விட்டு, ஒரு நோட்டில் ஒரு ரூபாய்கூட இல்ல, எடுக்கல என்று எழுதிவைத்து விட்டு சென்றுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

19 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

1 hour ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

2 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

3 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

5 hours ago