சொத்து தகராறு வழக்கில் கொலை செய்யப்பட்ட இளைஞன்! நிதியுதவி வழங்கிய எம்.பி.கனிமொழி!

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் செல்வன். இவர் கடந்த மாதம் 17-ம் தேதி நிலத்தகராறு தொடர்பாக காரில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளராக இருந்த ஹரிகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எம்.பி.கனிமொழி இளைஞன் செல்வனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி, ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025