சேலத்தில் சகோதரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற இளைஞர் – அதிரவைத்த சம்பவம்..!

Published by
Sharmi

சேலத்தில் தனது சகோதரியை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு காரில் வேகமாக சென்ற இளைஞர் பல சாலை தடுப்புகளை இடித்து தள்ளியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர். இவர் ஒரு கட்டிட தொழிலாளர். இவரின் சகோதரிக்கு கொரோனா பாதிப்பு காரணமாக திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சகோதரியை அழைத்துக்கொண்டு அவரது பலேனோ காரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டார். அப்போது, சகோதரியை அடிக்கடி கவனித்து கொண்டு காரை ஓட்டிய இவர், சற்றும் எதிர்பாராமல் சாலை ஓர கூம்பு வடிவ தடுப்புகள் மீது ஏற்றியுள்ளார். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் பல இரும்பு சாலை தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டார்.

அதனால், காரை நிறுத்தி காவல்துறையினரிடம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி அனுமதி பெற்று சென்றுள்ளார். சகோதரியை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, மீண்டும் காவல் துறையினரிடம் உண்மையை விளக்கி கூறியுள்ளார். பின்னர், இவரை அஸ்தம்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் இவர் கூறியது உண்மை என்று தெரியவந்துள்ளது. பதற்றத்தில் நடந்த சம்பவம் என்பதால் காவல்துறையினரும் மனிதாபிமான அடிப்படையில் இவரை திருப்பியனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Sharmi

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

8 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

8 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

9 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

10 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

10 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

11 hours ago