தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Published by
Rebekal

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டில் புதிய ஆக்சிஜன் படுக்கைகளை தொடங்கி வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் தறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சென்றுள்ளார். இந்த நிகழ்வுக்கு பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும், 890 தமிழக மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோய் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்தமிழக அரசிடம் 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாகவும் அதை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மக்கள் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனைகளின் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாகும் பொழுது நோயாளிகள் அவர்களின் நோய் தகுதிக்கேற்ப வார்டில் சேர்க்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

5 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

30 minutes ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

54 minutes ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

2 hours ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

2 hours ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

2 hours ago