‘Zero violation junction’ – வாகன ஓட்டிகளே ஜாக்கிரதை!

Published by
லீனா

சென்னையில், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வண்ணம் சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் விதிமீறல் இல்லாத திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறி செயல்படுவதன் மூலம் பலவிதமான ஆபத்துகள் ஏற்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு பல உயிர்கள் வாகன விபத்துகளினால் பறிபோகிறது. இந்நிலையில், சென்னையில் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வண்ணமாக காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதாவது ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் செல்வது, சீட் பெல்ட் போடாமல் பயணம் செய்வது, செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது, சிக்னல் ஜம்பிங், வெள்ளை கோட்டை தண்டி வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றை தடுக்கும் வண்ணமாக சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் விதிமீறல் இல்லாத திட்டம்(Zero violation junction) கொண்டுவரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த திட்டமானது அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல், அண்ணா நினைவு வளைவு சிக்னல், திருவான்மியூர் சிக்னல் மற்றும் மாதவரம் ரவுண்டானா சிக்னல் ஆகிய நான்கு சிக்னல்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்டமாக, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள ஆய்வாளர்கள் இத்திட்டம் குறித்து மக்களுக்கு அறிவுறுத்த  உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், போக்குவரத்து விதிமுறைகளை முற்றிலுமாக குறைப்பது. போக்குவரத்து காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் என கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள சந்திப்புகளில் நிபந்தனையின்றி உடனடியாக 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் இந்த திட்டம் பற்றி போலீசார் அறிவுரைகளை வழங்குவார்கள். ஒரே நபர் தொடர்ந்து விதிமுறைகள் மீறும்போது அவர்களது வாகன உரிமம் ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

3 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

3 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

3 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

5 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago