Categories: உலகம்

கடும் வெப்பம்: ஹஜ் யாத்திரை சென்ற 68 இந்தியர்கள் உட்பட 645 பேர் மரணம்.!

Published by
கெளதம்

சவுதி அரேபியா : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது, குறைந்தது 68 இந்தியர்கள் கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக கடந்ததாக சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த எண்ணிக்கையில் 323 எகிப்தியர்களும் 60 ஜோர்டானியர்களும் அடங்குவர். மேலும்,  இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் ஆகிய நாடுகளிலும் உள்ளவர்களும் உயிழந்தது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்களில் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்ததாகவும், அதில் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக மொத்தம் 1,75,000 இந்தியர்கள் சவூதி அரேபியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். கடந்த பல ஆண்டுகளாக சவூதி அரேபிய கோடைக்காலத்தில் ஹஜ் பயணம் குறைந்து வருகிறது.

Published by
கெளதம்

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

10 minutes ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

54 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

1 hour ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

3 hours ago