முதியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து..! 15 பேர் உயிரிழப்பு..!

Published by
செந்தில்குமார்

கனடாவில் முதியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் மனிடோபாவில் உள்ள நெடுஞ்சாலையில் முதியோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மானிடோபாவின் தலைநகரான வின்னிபெக்கிற்கு மேற்கே உள்ள கார்பெரி நகருக்கு அருகில் இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு முன்னதாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் கார்பெரியில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பேருந்தில் சுமார் 25 பேர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் முதியவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிருடன் இருப்பதாகவும், இந்த விபத்துக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்களை நான் என் எண்ணங்களில் வைத்திருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

30 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 hour ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

2 hours ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago